புதுச்சேரி: ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ இந்த ஜென்மத்தில் நடக்காது என்று புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார்.
புதுச்சேரியில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி இன்று (செப்.20) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “ஒரே நாடு ஒரே தேர்தல் இந்த ஜென்மத்தில் நடக்காது. மாநிலத்தில் ஆட்சி கலைந்துவிட்டாலோ, நாடாளுமன்றம் கவிழ்ந்தாலோ என்ன ஆகும் என்ற கேள்வி எழுகிறது. குடியரசுத் தலைவர் ஆட்சி அமைந்தால் அதன் பிறகு எத்தனை நாட்களுக்குள் தேர்தல் வரும் எனத் தெளிவில்லை. இதற்கு பாஜக கூட்டணிக் கட்சிகளே எதிர்ப்பு தெரிவிப்பார்கள்.