தீபாவளி சீட்டு நடத்தி லட்சக்கணக்கில் மோசடி.. தலைமறைவான கணவன், மனைவி மீது புகார்

2 hours ago 3
மதுரையை அடுத்த சோழவந்தானில் தீபாவளி சீட்டு நடத்தி லட்சக்கணக்கில் மோசடி செய்ததாக கணவன், மனைவி மீது 77 பேர் புகாரளித்துள்ளனர். வாரந்தோறும் 500 ரூபாய் வீதம் 55 வாரங்களுக்கு செலுத்தினால், நாற்பதாயிரம் ரூபாய் வழங்கப்படும் என விளம்பரப்படுத்தப்பட்டதை நம்பி, பலர் 500 ரூபாய் முதல் ஐயாயிரம் ரூபாய் வரை செலுத்தியதாக கூறப்படுகிறது. 53 வாரங்கள் முடிந்த நிலையில், சீட்டு நடத்திவந்த ராஜாவும், அவரது மனைவி தேவியும் தலைமறைவாகிவிட்டதாக பணம் செலுத்தியவர்கள் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர்.
Read Entire Article