விழுப்புரம்: ஒரே நாடு ஒரே தேர்தலில் உள்ள சிக்கல்களை, சந்தேகங்களை மத்திய அரசு போக்க வேண்டும். மக்கள் தொகை அடிப்படையில் கட்சிகளுக்கு வாக்களிப்பது பல நாடுகளில் நடைமுறையில் உள்ளது. இது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் இன்று (வியாழக்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ் பல்வேறு விஷயங்கள் பற்றியும் பேசினார்.