உத்தராகண்ட் நிலச்சரிவில் சிக்கி மீட்கப்பட்டவர்களில் 10 பேர் இன்று சிதம்பரம் வருகின்றனர்: மற்ற 20 பேர் நாளை வருவதாக தகவல்

3 days ago 8

கடலூர்: தமிழகத்தில் இருந்து உத்தராகண்ட் மாநிலத்துக்கு ஆன்மிக சுற்றுலா சென்று, நிலச்சரிவில் சிக்கி மீட்கப்பட்ட சிதம்பரம் பகுதியை சேர்ந்த 30 பேரில் 10 பேர் இன்று ஊர் திரும்புகின்றனர். மற்ற 20 பேர் நாளை வருவார்கள் என தெரிகிறது.

கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் இருந்து 18 ஆண்கள், 12 பெண்கள் என 30 பேர் உத்தராகண்ட்மாநிலம், ஆதிகைலாஷ் கோயிலுக்கு கடந்த 1-ம் தேதி ஆன்மிக சுற்றுலா சென்றனர். பல்வேறு ஆன்மிக தலங்களை பார்த்த பிறகு அவர்கள் அங்கிருந்து திரும்பிக் கொண்டிருந்தபோது ஆதிகைலாஷில் இருந்து 18 கி.மீ. தொலைவில் நிலச்சரிவு ஏற்பட்டது.

Read Entire Article