சிவகங்கை: சிவகங்கையில் நடைபெற்ற அமைச்சர் உதயநிதி ஆய்வுக் கூட்டத்தில் தவறான பதிலளித்த திருப்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலரை பணியிடை நீக்கம் செய்தும், தாமதமாக பணிக்குச் சென்ற மூவரை இடமாற்றம் செய்தும் மாவட்ட ஆட்சியர் ஆஷாஅஜித் உத்தரவிட்டார்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து அதிகாரிகளுடன் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஆய்வுக் கூட்டம் நடத்தினார். அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், மாவட்ட ஆட்சியர் ஆஷாஅஜித் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மக்களுடன் முதல்வர் திட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது அதிகாரிகள் எடுத்த நடவடிக்கை குறித்து ஆய்வு செய்தார்.