உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்

1 week ago 11

சிவகங்கை, செப். 12: சிவகங்கை மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவித்துள்ளதாவது:மக்களின் குறைகளை கேட்டு உடனுக்குடன் தீர்வு காண உங்களை தேடி உங்கள் ஊரில் என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் கலெக்டர் உள்ளிட்ட மாவட்ட அனைத்து உயர் அலுவலர்களும் ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் வட்ட அளவில் தங்கி கள ஆய்வில் ஈடுபட்டு, அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து மக்களின் குறைகளை கேட்டறிந்து அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைவதை உறுதி செய்வர். இதனடிப்படையில் செப்.18அ ன்று இளையான்குடியில் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம் நடைபெற உள்ளது. எனவே இன்று மற்றும் நாளை ஆகிய 2 நாட்கள் பொதுமக்கள் தங்களின் குறைகள் தொடர்பான மனுக்களை இளையான்குடி வட்டத்திற்குட்பட்ட பேரூராட்சி அலுவலகம், விஏஓ அலுவலகம் மற்றும் ஊராட்சி மன்ற அலுவலகங்களில் அளிக்கலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article