இலங்கையில் தமிழக மீனவர்கள் அவமதிப்பு; மத்திய அரசு வேடிக்கை பார்க்க கூடாது: மார்க்சிஸ்ட், பாமக கட்சிகள் கண்டனம்

4 days ago 7

சென்னை: இலங்கையில் தமிழக மீனவர்கள் அவமதிக்கப்பட்டதை மத்திய அரசு வேடிக்கை பார்க்க கூடாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் பாமக கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்: தமிழக மீனவர்களை கைது செய்தும், உடைமைகளை முடக்கியும் அச்சுறுத்தி வந்த இலங்கை அரசின் அட்டூழியம் தற்போது மீனவர்களை மொட்டையடித்து அவமதிக்கும் அநாகரீக எல்லைக்குச் சென்றுள்ளது. இலங்கை கடற்படையின் இந்த அராஜகப்போக்கு வன்மையாக கண்டிக்கத்தக்கது. இவ்விவகாரத்தில் மத்திய அரசின் அணுகுமுறையும் மீனவர்கள் பிரச்சினையை புறக்கணிப்பதாகவே இருந்து வருகிறது. இதையொட்டி இலங்கை அரசையும், தமிழக மீனவர்களின் பிரச்சினையில் பாராமுகமாக உள்ள மத்திய பாஜக அரசாங்கத்தின் அலட்சியப் போக்கைக் கண்டித்தும் வரும் செப்.20-ம் தேதி ராமேசுவரத்தில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படும்.

Read Entire Article