“இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் தலைவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கவில்லை” - செல்வப்பெருந்தகை

1 week ago 9

பரமக்குடி: “இமானுவேல் சேகரன் நினைவிடத்துக்கு அஞ்சலி செலுத்த வந்த தலைவர்களுக்கு ராமநாதபுரம் காவல் துறை உரிய பாதுகாப்பு வழங்காமல் அலட்சியமாக செயல்பட்டது” என காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை குற்றம்சாட்டினார்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்திய காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களிடம் கூறியது: "9.10.2010-ல் இமானுவேல் சேகரன் பிறந்த தினம் அன்று அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் இமானுவேல் சேகரன் அஞ்சல் தலையை வெளியிட்டார். இதன்மூலம், அவரை தேசிய தலைவராக அங்கீகரித்தது காங்கிரஸ் கட்சி. தற்போது மணி மண்டபம் கட்டவும், அவரது பிறந்த நாளை அரசு விழாவாகவும் அறிவித்த தமிழக அரசுக்கு நன்றி.

Read Entire Article