சென்னை: ஆட்சி, அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்திருப்பது அவரது கட்சியின் கருத்து. காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை எந்த கொள்கை முடிவுகளாக இருந்தாலும் அதை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தான் எடுக்கும் என்று செல்வபெருந்தகை தெரிவித்தார்
தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் சார்பில் மகளிர் காங்கிரஸ் நிறுவன நாள் விழா, இணைய வழி மகளிர் உறுப்பினர் சேர்ப்பு மற்றும் அரசியலில் பெண்களின் பங்களிப்பு எனும் தலைப்பில் கருத்தரங்கம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடைபெற்றது