அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் இபிஎஃப் பணம் எங்கே? - ஐகோர்ட் கேள்வி

1 week ago 9

மதுரை: அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களின் இபிஎப் பணம் எங்கே என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

மதுரை கோட்ட அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரிந்த சுப்புராஜ் ஜூன் 30ம் தேதி 2023ல் ஓய்வு பெற்றார். அவர் ஓய்வூதியப் பணப் பலன்கள், விடுமுறை நாள் ஊழியம், பணிக்கொடை, வருங்கால வைப்பு நிதி கேட்டு உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த தனி நீதிபதி, "மனுதாரருக்கு ஓய்வு பெற்ற நாளிலிருந்து 6 சதவீத வட்டியுடன் அனைத்து பணப் பலன்களையும் வழங்க வேண்டும் என டிசம்பர் 21ம் தேதி 2023ல் உத்தரவிட்டார். இந்த உத்தரவை நிறைவேற்றாததால் மதுரை அரசு போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குனர் ஆறுமுகம், பொதுமேலாளர் சிவலிங்கம், நெல்லை மண்டல அரசு போக்குவரத்துக் கழக நிர்வாகி பாமா ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்யப்பட்டன.

Read Entire Article