அரசு அனுமதி பெற்ற மகளிர் விடுதிகள் பட்டியல் வெளியிடப்படுமா? - மதுரை மக்கள் எதிர்பார்ப்பு

3 days ago 5

மதுரை: மதுரையில் ஏற்பட்ட மகளிர் விடுதி தீவிபத்தைத் தொடர்ந்து குற்றச் செயல்கள், இதுபோன்ற அனுமதியில்லாமல் நடத்தப்படும் விடுதிகளை எளிதல் கண்டறிய மதுரையில் அனுமதியில்லாமல் செயல்படும் மகளிர் விடுதிகளைக் கண்டறியவும் அனுமதி பெற்ற மற்றும் அனுமதி பெறாத விடுதிகள் பட்டியலை வெளியிடுவதற்கு மாவட்ட சமூக நலத் துறை நடவடிக்கை எடுக்குமா என்ற எதிர்பார்ப்பு பொது மக்களிடம் எழுந்துள்ளது.

நகர்ப்புறங்களில் வேலைவாய்ப்புகளுக்காகவும், படிப்பதற்காகவும் மாணவிகள், பெண்கள் வீடுகளை தவிர்த்துவிட்டு விடுதிகளில் தங்கு கின்றனர். விலைவாசி உயர்வு, அதிகப்படியான வீட்டு வாடகையால் தனி நபராக வீடு வாடகைக்கு எடுக்க முடியாமல் மகளிர் விடுதிகளில் இவர்கள் தங்குகின்றனர். விடுதிகளில் சுகாதாரமற்ற சூழல், தரமற்ற சாப்பாடு, இடநெருக்கடி போன்ற இடர்பாடுகள் இருந்தாலும் குடும்பச் சூழல் கருதி பெண்கள், மாணவிகள் அனைத்தையும் சகித்துக்கொண்டு விடுதிகளில் தங்குகின்றனர். இதனால், மகளிர் விடுதிகளில் நடக்கும் பல விரும்பத் தகாத சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வருவதில்லை.

Read Entire Article