அதிக ஒளி பாய்ச்சி மீன் பிடித்த 4 படகுகளின் மின் விளக்குகள் பறிமுதல்

1 week ago 12

தொண்டி,செப்.12: தொண்டி பகுதியில் அதிக ஒளி பாய்ச்சி மீன் பிடிப்பதாக எழுந்த புகாரால், நேற்று ஆய்வின் போது நான்கு படகுகளில் பொருத்தி இருந்த மின் விளக்குகளை பறிமுதல் செய்யப்பட்டது. தொண்டி புதுக்குடி மீனவ கிராமத்தில் மீன்வள ஆய்வாளர்கள் தேவிபட்டினம், தொண்டி, கடலோர அமலாக்க சட்டப்பிரிவு சார்பு ஆய்வாளர், மீன்வள மேற்பார்வையாளர் ஆகியோர் இணைந்து ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அரசால் தடை செய்யப்பட்ட மின் விளக்குகளை பயன்படுத்தி மீன் பிடித்த புதுக்குடியை சேர்ந்த ராமகிருஷ்ணன், பஞ்சாட்சரம், சுப்பிரமணி மற்றும் மணி ஆகிய மீனவர்களின் படகுகளில் பொருத்தப்பட்டுள்ள மின்விளக்குகளை பறிமுதல் செய்தனர்.

The post அதிக ஒளி பாய்ச்சி மீன் பிடித்த 4 படகுகளின் மின் விளக்குகள் பறிமுதல் appeared first on Dinakaran.

Read Entire Article