ஃபாஸ்டேக்-கில் பணமின்றி அரசு பஸ்களை திருப்பி அனுப்பிய கப்பலூர் சுங்கச்சாவடி நிர்வாகம் - பயணிகள் அதிருப்தி

1 week ago 9

மதுரை: ‘ஃபாஸ்டேக் ’-கில் போதிய இருப்புத் தொகையின்றி அரசு பேருந்துகளை திருப்பி அனுப்பிய மதுரை கப்பலூர் சுங்கச்சாவடி நிர்வாகத்தினர் மீது பயணிகள் அதிருப்தி அடைந்தனர்.

தமிழகத்திலுள்ள சுங்கச்சாவடிகளில் தனியார் வாகனங்களுக்கு தூரத்தின் அளவைப் பொறுத்து சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. காவல்துறை, அரசு வாகனங்கள் தவிர, அரசு பேருந்துகளுக்கு சுங்கக் கட்டணம் வசூலிப்பது வழக்கம். இதற்காக ஒவ்வொரு அரசு பேருந்துகளின் முன்பகுதி கண்ணாடியில் சுங்கக் கட்டணத்தை தானியங்கி இயந்திரம் மூலம் எடுக்கும் வகையில் ‘ஃபாஸ்டேக் ஸ்டிக்கர் ’ ஒட்டப்பட்டு இருக்கும். இதன்மூலம் சம்பந்தப்பட்ட சுங்கச்சாவடிகளில் கட்டணம் எடுக்கப்படுகிறது.

Read Entire Article