30 தமிழர்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், டெல்லி அழைத்து வர ஏற்பாடு!

6 days ago 5

சென்னை: உத்தராகண்டில் நிலச்சரிவால் சிக்கித் தவித்த 30 தமிழர்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில் டெல்லி அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 30 பேரும் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டு தர்கலா என்ற இடத்தில் தங்க வைப்பு. நிலச்சரிவால் சிக்கித் தவித்த 30 பேரையும் மீட்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டதை அடுத்து உடனடி நடவடிக்கை. தமிழ்நாடு அரசின் உடனடி நடவடிக்கை மூலம் மீட்கப்பட்ட 30 பேரும் ஓரிரு நாளில் விமானம் மூலம் தமிழ்நாடு திரும்புவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post 30 தமிழர்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், டெல்லி அழைத்து வர ஏற்பாடு! appeared first on Dinakaran.

Read Entire Article