நீர் இல்லாத தடுப்பணையை திறந்த அமைச்சர் துரைமுருகன் - முன்பே தண்ணீர் காலியானது எப்படி?

3 hours ago 5

வேலூர்: பொன்னை ஆற்றின் குறுக்கே ரூ.12.70 கோடியில் கட்டிய புதிய தடுப்பணையில் தேக்கி வைக்கப்பட்ட தண்ணீரை மர்ம நபர்கள் திறந்துவிட்டுள்ளனர். இதையடுத்து, காலியான அணையை திறந்துவைத்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், “தண்ணீரை திறந்தவர்கள் 15 நாட்களில் கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்படுவார்கள்,” என்று கூறியுள்ளார்.

வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டம் குகையநல்லூர் கிராமத்தில் பொன்னை ஆற்றின் குறுக்கே நீர்வளத்துறை சார்பில் ரூ.12.70 கோடி மதிப்பில் புதிதாக தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. 270 மீட்டர் நீளமும், 1.50 மீட்டர் உயரம் கொண்டதாக இந்த தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. தடுப்பணையின் நீர்மட்ட அளவின்படி ஆற்றில் 750 மீட்டர் நீளத்துக்கு தண்ணீர் தேங்கும்படியும், 5.36 மி.க.அடி கொள்ளளவுக்கு நீரை தேக்கிவைக்க முடியும். இதன்மூலம், பொன்னை ஆற்றின் இரண்டு பக்கமும் 2 கி.மீ. சுற்றளவில் உள்ள குகையநல்லூர், தக்காம்பாளையம், ஏகாம்பரநல்லூர், மருதம்பாக்கம், வெப்பாலை, ஸ்ரீபாதநல்லூர், ராமகிருஷ்ணாபுரம், சிவானூர், மேல்பாடி, தேன்பள்ளி ஆகிய 10 கிராமங்களின் நிலத்தடிநீர் செறிவூட்டப்பட்டு 40 கிணறுகள் மற்றும் ஆழ்துளை கிணறுகள் மூலம் 716 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

Read Entire Article