சென்னை: குஜராத் உள்ளிட்ட 3 மாநிலங்களில் தடைசெய்யப்பட்ட கோனோகார்பஸ் மரங்களுக்கு தமிழகத்திலும் தடை விதிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தமிழகத்தில் பசுமை பரப்பை அதிகரிக்க, ‘பசுமை தமிழ்நாடு இயக்கம்’, ‘ஈரநில இயக்கம்’ உள்ளிட்ட பல்வேறு இயக்கங்களை அரசு தொடங்கியுள்ளது. அவற்றின் மூலமாக பல்வேறு மரக்கன்றுகளை நட்டு பசுமை பரப்பை அதிகரித்து வருகிறது அரசு. இந்நிலையில், 3 மாநிலங்களில் தடைவிதிக்கப்பட்ட, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் கோனோகார்பஸ் தாவரங்களை வளர்க்க தமிழகத்திலும் தடை விதிக்க வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.