17 வயது சிறுமியை கடத்தி திருமணம்

2 days ago 4

கிருஷ்ணகிரி, செப்.18: கிருஷ்ணகிரி குழந்தைகள் நல அலுவலர் தமிழ்செல்வி, கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், மகாராஜகடை அருகேயுள்ள பெரிய சக்கனாவூர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை, கடந்த 9ம் தேதி அதே பகுதியில் உள்ள சிந்தகம்பள்ளி கிராமத்தை சேர்ந்த கார்த்திக்(37) என்பவர் கடத்திச்சென்று காட்டிநாயனப்பள்ளி முருகன் கோயிலில் சிறுமியை திருமணம் செய்து கொண்டுள்ளார். இதுபற்றி விசாரணை நடத்தி, சிறுமியை மீட்பதுடன், கார்த்திக் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவித்திருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post 17 வயது சிறுமியை கடத்தி திருமணம் appeared first on Dinakaran.

Read Entire Article