102-வது பிறந்த நாள்: கோவில்பட்டியில் எழுத்தாளர் கி.ரா சிலைக்கு ஆட்சியர், தலைவர்கள் மரியாதை

3 days ago 5

கோவில்பட்டி: எழுத்தாளர் கி.ரா.வின் 102-வது பிறந்த நாளை முன்னிட்டு கோவில்பட்டியில் உள்ள அவரது சிலைக்கு அரசு சார்பில் ஆட்சியர் மரியாதை செலுத்தினார்.

கரிசல் இலக்கியத்தின் முன்னத்தி ஏர் என்றழைக்கப்படும் கி.ராஜநாராயணின் பிறந்த நாள் விழா அரசு விழாவாக நடத்தப்பட்டு வருகிறது. அவரது 102-வது பிறந்த நாளான இன்று (செப்.16) கோவில்பட்டி நினைவரங்கில் உள்ள கி.ரா.வின் முழு உருவ வெண்கல சிலைக்கு அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, கோட்டாட்சியர் மகாலட்சுமி, நகர்மன்ற தலைவர் கருணாநிதி, நகராட்சி ஆணையர் கமலா, ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் கஸ்தூரி சுப்புராஜ் உள்ளிட்டோர் கி.ரா. சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Read Entire Article