வேதாரண்யம் பகுதியில் நெடுஞ்சாலைதுறை சார்பில் சாலையோர தூய்மை பணி

1 week ago 9

வேதாரண்யம், செப்.12: வேதாரண்யம் பகுதியில் நெடுஞ்சாலைத்துறையினர் சாலை தூய்மைப்பணி மேற்கொண்டனர்.நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு தலைமை பொறியாளர் சத்திய பிரகாஷ் அறிவுரைகளின் படியும், மற்றும் கண்காணிப்பு பொறியாளர் .செந்தில் ஆலோசனையின் படியும், நாகப்பட்டினம் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டம், வேதாரண்யம் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு உட்கோட்டத்திற்குட்பட்ட கோடியக்கரை வேதாரண்யம் – நாகை சாலையில் சாலைகளில் இருபுறமும் மண்டி கிடக்கும் முட்புதர்கள் மற்றும் புட்களைஅகற்றும் பணி நடைபெற்றது. மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சாலை ஓரங்களில் வளர்ந்துள்ள முட்செடிகளை அகற்றும் பணிகளையும், கோட்டப்பொறியாளர் நாகராஜன் ஆய்வு செய்தார். உதவி கோட்ட பொறியாளர் சுரேஷ்மற்றும் உதவிப்பொறியாளர் மதன்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

The post வேதாரண்யம் பகுதியில் நெடுஞ்சாலைதுறை சார்பில் சாலையோர தூய்மை பணி appeared first on Dinakaran.

Read Entire Article