விபத்தில் மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்..!!

1 week ago 11

கிருஷ்ணகிரி: ஊத்தங்கரை அருகே விபத்தில் மூளைச்சாவு அடைந்த முனியம்மாள் என்பவரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. நேற்று முன்தினம் முனியம்மாள் மளிகை பொருட்களை வாங்கிக் கொண்டு பைக்கில் வீட்டிற்கு சென்றபோது விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் படுகாயமடைந்த முனியம்மாளை தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தலையில் அடிப்பட்டதால் ரத்தக்கசிவு ஏற்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த முனியம்மாள் நேற்று மூளைச்சாவு அடைந்தார். மூளைச்சாவு அடைந்த முனியம்மாளின் கல்லீரல், 2 கண்கள், சிறுநீரகம் ஆகியவை தானமாக வழங்கப்பட்டது. கோவை, சேலம் அரசு மருத்துவமனைகளில் தலா ஒரு சிறுநீரகமும் கோவை தனியார் மருத்துவமனைக்கு கல்லீரலும் அனுப்பப்பட்டன. உடல் உறுப்பு தானம் செய்யப்பட்ட முனியம்மாளின் உடலுக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டன.

The post விபத்தில் மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்..!! appeared first on Dinakaran.

Read Entire Article