போடி: தேனி மாவட்டம் தேவாரம் அருகே விநாயகர் சிலையை ஆற்றில் கரைத்துவிட்டு திரும்பியபோது டிராக்டர் கவிழ்ந்ததில் 3 சிறுவர்கள் உயிரிழந்தனர். ஒருவர் படுகாயமடைந்தார்.
தேவாரம் அருகே உள்ளமறவப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சிறுவர்கள் சிலர், 5 அடி உயர விநாயகர் சிலையை வைத்து விநாயகர்சதுர்த்தி விழாவைக் கொண்டாடினர்.