சென்னை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மது ஒழிப்பு மாநாடு என்பது அப்பட்டமான நேர்மையற்ற அரசியல் என்று தமிழக பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "காந்தி பிறந்த அக்டோபர் 2-ம் தேதி, கள்ளக்குறிச்சியில் மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு நடத்தப் போவதாக பத்திரிகையாளர்கள் மத்தியில் கடந்த 10-ம் தேதி அறிவித்த திருமாவளவன், இந்த மாநாடு அரசியலுக்கு, தேர்தல் கூட்டணிக்கு அப்பாற்பட்டது என்றார். அதிமுக உள்பட எந்த ஒரு அரசியல் கட்சியும் அமைப்புகளும் பொதுநல நோக்கோடு இதில் கலந்து கொள்ளலாம் என அழைப்பு விடுத்தார். ஆனால், உடனேயே, பாஜக மற்றும் பாமகவுக்கு இதில் இடமில்லை என்றார். அப்போதே, இது அப்பட்டமான நேர்மையற்ற அரசியல் என்பது அம்பலாகிவிட்டது.