வாட்ஸ்அப் மூலம் அனுப்பிய புகாருக்கு உடனடி தீர்வு: தென்னக ரயில்வேக்கு வணிகர்கள் நன்றி

13 hours ago 4

கும்பகோணம்: கடலூர் - மைசூர் விரைவு ரயிலில் கழிவறையில் உள் தாழ்ப்பாள் சேதமடைந்தது குறித்து தென்னக ரயில்வேக்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்பிய புகார் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து சீர் செய்த தென்னக ரயில்வேவுக்கு வணிகர்கள் நன்றியை தெரிவித்துள்ளனர்.

கடலூரில் இருந்து மைசூர் விரைவு ரயில் கடந்த 18-ம் தேதி புறப்பட்டது. அதில் கும்பகோணம் அனைத்து தொழில் வணிகர் சங்க கூட்டமைப்பின் செயலாளர் வி.சத்யநாராயணன் மற்றும் ஏராளமான பயணிகள் பயணம் செய்தனர். அப்போது அவரது அருகில் இருந்த பயணி ஒருவர் கழிவறைக்கு சென்றபோது உள் தாழ்ப்பாள் சேதமடைந்திருந்ததை அறிந்தார். இது தொடர்பாக அவர், வி.சத்தியநாராயணனிடம் தெரிவித்துள்ளார்.

Read Entire Article