கடலூர்: கடலூர் மாவட்டம் வடலூர் சத்திய ஞான சபையில் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தகர தடுப்பு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
வடலூர் வள்ளலார் சத்திய ஞான சபையில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க தமிழக அரசு ரூ.99 கோடி நிதி ஒதுக்கி அதற்கான பணிகள் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது. இந்த நிலையில், வள்ளலார் சர்வதேச மையத்தை பெருவெளியில் அமைக்கக் கூடாது என பல்வேறு அரசியல் கட்சியினர், பொதுநல அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.