ரூ.2,200 கோடி பங்குவர்த்தக மோசடி: நடிகை சரண்

1 week ago 12

அசாம்: ரூ.2,200 கோடி பங்குவர்த்தக மோசடி தொடர்பாக தேடப்பட்டு வந்த அசாம் நடிகை சுமி போரா, கணவர் தார்கிக் போரா சரண் அடைந்துள்ளனர். பங்குவர்த்தக மோசடி வழக்கில் 10 நாட்களாக தேடப்பட்டு வந்த 2 பேரும் திப்ரூகர் போலீசில் சரணடைந்தனர். பங்குவர்த்தக மோசடியில் முக்கிய நபரான விஷால் புக்கனிடம் இருந்து நடிகை சுமி போரா ரூ.20 கோடி பெற்றதாக புகார் அளிக்கப்பட்டது. நடிகை சுமி போராவுக்காக ஏராளமான பணத்தை விஷால் புக்கன் செலவிட்டுள்ளதாக முதலீட்டாளர்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். கடந்த ஆண்டு ராஜஸ்தானில் நடைபெற்ற சுமி போரா- தாரிக் திருமண செலவையே விஷால் புக்கள் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. பங்குச்சந்தையில் முதலீடு செய்து குறுகிய காலத்தில் பணத்தை இரு மடங்காக பெருக்கலாம் என்று கூறி மோசடி நடத்தியுள்ளனர்.

The post ரூ.2,200 கோடி பங்குவர்த்தக மோசடி: நடிகை சரண் appeared first on Dinakaran.

Read Entire Article