“ராகுல் காந்தி குறித்து பேசியதில் இருந்து பின்வாங்க மாட்டேன்” - ஹெச்.ராஜா உறுதி

23 hours ago 5

ராமநாதபுரம்: “காங்கிரஸ் ஆட்சி காலத்தில் 600-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஆனால் கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் ஒரு மீனவர் மட்டுமே சுட்டு கொல்லப்பட்டார். காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை என்னிடம் நேருக்கு நேர் உரையாட தகுதியற்றவர். ராகுல் காந்தி குறித்து நான் பேசியதில் இருந்து பின்வாங்க மாட்டேன்,” என பாஜக மாநில ஒருங்கிணைப்பாளர் ஹெச்.ராஜா கூறியுள்ளார்.

ராமநாதபுரம் நகர் காட்டுப்பிள்ளையார் கோவில் தெருவில் பாஜக மாநில ஒருங்கிணைப்பாளர் ஹெச்.ராஜா இன்று (செப்.18) வீடு வீடாகச் சென்று உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்து, பொதுமக்களுக்கு உறுப்பினர் அட்டைகளை வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட தலைவர் தரணிமுருகேசன், சிறுபான்மை அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராகீம், மாவட்ட பொறுப்பாளர் முரளிதரன் உள்ளிட்ட கட்சியினர் கலந்து கொண்டனர்.

Read Entire Article