மோடி ஆட்சியில் இந்திய பொருளாதாரம் அதிகமாக முடங்கியுள்ளது: மக்களவையில் திமுக எம்.பி.தயாநிதி மாறன் குற்றசாட்டு

3 months ago 11

டெல்லி: இந்திய பொருளாதாரம் முடங்கியுள்ளது என்று திமுக எம்.பி.தயாநிதி மாறன் கூறியுள்ளார். உறங்குவோரை எழுப்பிவிடலாம், உறங்குவது போல் நடிப்பவரை எழுப்ப முடியாது என்று மக்களவையில் திமுக நாடாளுமன்றக் குழு துணைத் தலைவர் தயாநிதி மாறன் உரையாற்றியுளளார்.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இதுவரை வரலாற்றில் இல்லாத அளவுக்கு சரிந்துள்ளது. மோடி ஆட்சியில் இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவு சரிந்துள்ளது. மன்மோகன் ஆட்சியில் டாலரின் மாற்று மதிப்பு 68ஆக இருந்த நிலையில் பாஜக ஆட்சியில் 86ஆக சரிந்துவிட்டது.

டாலரின் மதிப்பு வலுவானதன் காரணமாக இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்துவிட்டதாக நிர்மலா சீதாராமன் காரணம் கூறுகிறார். ஒன்றிய அரசின் பட்ஜெட் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக உள்ளது. வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு, பொருட்களுக்கான தேவைப்பாடு குறைவு ஆகியவற்றால் இந்திய பொருளாதாரம் முடங்கியுள்ளது.

வேலையில்லா பிரச்சனை மற்றும் அவசியப் பொருட்களின் விலை உயர்வால் நடுத்தர வர்க்கம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்திய மக்களின் உண்மையான பிரச்சனைகளை தீர்க்க பட்ஜெட்டில் எந்த அம்சங்களும் இல்லை. மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான இலக்கு 8%ஆக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.

ஆனால், பாஜக ஆட்சிக்காலத்தில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.4%ஆக சரிந்துள்ளது. இந்தாண்டு பொருளாதார வளர்ச்சி வெறும் 6.8%ஆக இருக்கும் என்றே கணிக்கப்பட்டுள்ளது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மாற்று மதிப்பு 87.33ஆக சரிந்துவிட்டது. ஜனவரி மாதத்தில் மட்டும் 8 பில்லியன் டாலர் அந்நிய முதலீடுகள் இந்தியாவில் இருந்து சென்றுள்ளன.

 

The post மோடி ஆட்சியில் இந்திய பொருளாதாரம் அதிகமாக முடங்கியுள்ளது: மக்களவையில் திமுக எம்.பி.தயாநிதி மாறன் குற்றசாட்டு appeared first on Dinakaran.

Read Entire Article