புதுச்சேரி: பந்த் போராட்டத்தில் இண்டியா கூட்டணிக்கும் அரசுக்கும் இடையில் இருந்த மறைமுக உறவு வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது என்று புதுச்சேரி அதிமுக விமர்சித்துள்ளது.
இது குறித்து அதிமுகவின் புதுவை மாநிலச் செயலாளர் அன்பழகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மின் கட்டண உயர்வு தொடர்பாக நடைபெற்று வரும் பந்த் போராட்டத்தில் இண்டியா கூட்டணிக்கும், அரசுக்கும் இருந்த மறைமுக உறவு வெட்ட வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. பந்த் சம்பந்தமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இண்டியா கூட்டணிக் கட்சி தலைவர்களை கைது செய்ய வேண்டுமென அதிமுக சார்பில் காவல்துறையிடம் நேற்று மனு அளிக்கப்பட்டது.