முரசொலி மாறன் உருவப்படத்துக்கு அமைச்சர்கள், திமுகவினர் மரியாதை..!!

3 months ago 13

திருவண்ணாமலை: மறைந்த முன்னாள் ஒன்றிய அமைச்சர் முரசொலி மாறனின் 21-ம் ஆண்டு நினைவு நாளை ஒட்டி திருவண்ணாமலையில் முரசொலி மாறன் திருவுருவப் படத்துக்கு அமைச்சர் எ.வ.வேலு மலர் தூவி மரியாதை செலுத்தினார். தஞ்சை கலைஞர் அறிவாலயத்தில் முரசொலி மாறன் திருவுருவப் படத்துக்கு திமுகவினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். முரசொலி மாறன் உருவப்படத்துக்கு அமைச்சர் கோவி.செழியன், முரசொலி எம்.பி. உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். திருவையாறு எம்.எல்.ஏ. துரை சந்திரசேகரன், மேயர் ராமநாதன், முன்னாள் அமைச்சர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் மரியாதை செலுத்தினர். கும்பகோணத்தில் முன்னாள் ஒன்றிய அமைச்சர் முரசொலி மாறன் திருவுருவப் படத்துக்கு திமுகவினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக சார்பாக முரசொலி மாறன் படத்துக்கு திமுகவினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

The post முரசொலி மாறன் உருவப்படத்துக்கு அமைச்சர்கள், திமுகவினர் மரியாதை..!! appeared first on Dinakaran.

Read Entire Article