முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில் தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

1 week ago 8

சென்னை அபிராமபுரத்தில் உள்ள தனியார் பள்ளிக்கு இமெயில் மூலம், முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதுகுறித்து பள்ளி நிர்வாகம் சார்பில் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பள்ளி வளாகம் முழுவதும் மோப்ப நாய்கள் மற்றும் வெடிகுண்டு சோதனை கருவிகளைக் கொண்டு பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர். மூன்று மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற சோதனையில் தடயங்கள் கிடைக்காததால், மிரட்டல் போலி என்பது உறுதி செய்யப்பட்டது. எனினும், சந்தேகத்துக்கிடமான வகையில் மர்ம பொருட்கள் பள்ளியில் உள்ளதா? என விசாரணை நடைபெற்று வருகிறது.

Read Entire Article