முதியவரை தாக்கிய இருவர் கைது

1 week ago 7

 

விருதுநகர், செப்.11: பெட்டி கடையில் பொருட்கள் வாங்கிவிட்டு பணம் தராமல் முதியவரை தாக்கிய 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். விருதுநகர் சிவந்திபுரம் காட்டுத்தெருவை சேர்ந்தவர் தங்கவேல்(84). இவர் நகராட்சி ரோட்டில் பெட்டி கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் பட்டுத்தெருவை சேர்ந்த ஜெகன்ராஜ்(32), பால்பாண்டி(32) இருவரும் பொருட்கள் வாங்கி உள்ளனர்.

கொடுத்த பொருட்களுக்கான பணத்தை தங்கவேல் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இருவரும் சேர்ந்து முதியவரை தாக்கி உள்ளனர். இது குறித்து தங்கவேல் மகன் ராஜதுரை பஜார் போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் ஜெகன்ராஜ், பால்பாண்டி இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

The post முதியவரை தாக்கிய இருவர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article