முதியவரிடம் பணம் பறிக்க முயன்ற வாலிபர்

4 months ago 18

 

திருப்பூர், அக். 16: திருப்பூர் அனுப்பர்பாளையம் புதூர் பிள்ளையார் கோயில் வீதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (58). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் ராஜேந்திரன் பைக்கில் அனைப்பாளையம் சோதனை சாவடி பின்புறம் திருவள்ளுவர் நகர் பகுதியில் இரு சக்கர வாகனத்தில் வந்துள்ளார். அப்போது, வாலிபர் ஒருவர் ராஜேந்திரனை தடுத்து நிறுத்தி பைக் மற்றும் ரூ.10 ஆயிரம் பணம் கேட்டு மிரட்டியுள்ளார்.

ராஜேந்திரன் தரமறுத்ததால் அந்த வாலிபர் ராஜேந்திரனை கீழே தள்ளி விட்டு பைக், பணம் ஆகியவற்றை பறித்துள்ளார். இதனால், ராஜேந்திரன் கூச்சலிட்டுள்ளார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அந்த வாலிபரை பிடித்து 15.வேலம்பாளையம் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தியதில் சிறுபூலுவபட்டியை சேர்ந்த மைக்கேல் (18) என்பது தெரியவந்தது. பின்னர், போலீசார் மைக்கேலை கைது செய்து சிறையிலடைத்தனர்.

The post முதியவரிடம் பணம் பறிக்க முயன்ற வாலிபர் appeared first on Dinakaran.

Read Entire Article