சிவகாசி: முதல்வரின் அமெரிக்க பயணம் தோல்வி அடைந்துள்ளது. தமிழகத்தில் செய்யப்பட்ட முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
சிவகாசியில் மதி ஒருங்கிணைந்த புதிய மருத்துவமனை வளாக திறப்பு விழா நடைபெற்றது. மருத்துவமனை தலைவர் டாக்டர் மகேந்திரசேகர் தலைமை வகித்தார். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய வளாகத்தை திறந்து வைத்தார்.