முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலையாளத்தில் ஓணம் வாழ்த்து

5 days ago 7

சென்னை,

கேரளாவில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஓணம் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. கேரளாவில் மட்டுமின்றி, மலையாள மக்கள் வசிக்கும் பல்வேறு மாநிலங்களிலும், நாடுகளிலும் கூட ஓணம் பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலையாளத்தில் பதிவிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "உலகெங்கிலும் உள்ள எனது மலையாளி சகோதர, சகோதரிகளுக்கு இதயம் கனிந்த ஓணம் வாழ்த்துகள். பெரும் இயற்கைப் பேரிடரின் பாதிப்பில் இருந்து மீண்டு வரும் கேரளாவில் உள்ள எனது திராவிட சகோதர, சகோதரிகளுக்கு இந்த பண்டிகை காலம் நம்பிக்கையையும் வலிமையையும் தரட்டும். இந்த ஓணம் மலையாளிகளின் ஒற்றுமையையும் வாழ்வையும் பிரதிபலிக்கட்டும்!" என்று தெரிவித்துள்ளார்.

ലോകമെമ്പാടുമുള്ള എൻ്റെ മലയാളി സഹോദരങ്ങൾക്ക് ഹൃദയം നിറഞ്ഞ #ഓണാശംസകൾ!

വലിയൊരു പ്രകൃതി ദുരന്തത്തിന്റെ ആഘാതത്തിൽ നിന്ന് കരകയറുന്ന കേരളത്തിലെ എൻ്റെ ദ്രാവിഡ സഹോദരങ്ങൾക്ക് ഈ ഉത്സവകാലം പ്രത്യാശയും ശക്തിയും നൽകട്ടെ.

ഈ ഓണക്കാലം മലയാളികളുടെ ഒത്തൊരുമയുടെയും അതിജീവനത്തിന്റെയും… pic.twitter.com/52ppKMnETW

— M.K.Stalin (@mkstalin) September 15, 2024

Read Entire Article