மீனவர்கள் விவகாரம் | இலங்கை மீது இந்தியா தூதரக நடவடிக்கை மேற்கொள்ள ராமதாஸ் வலியுறுத்தல்

3 months ago 11

சென்னை: மீனவர்கள் கைது செய்யப்படும் விவகாரத்தில் வாக்குறுதியை மீறிய இலங்கை மீது இந்தியா தூதரக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “வங்கக்கடலில் மீன்பிடிக்கச் சென்ற ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 14 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ள இலங்கைக் கடற்படை, அவர்களின் இரு படகுகளையும் பறிமுதல் செய்திருக்கிறது. தமிழ்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தை சிதைக்கும் வகையில் இலங்கை கடற்படையினர் தொடர்ந்து இத்தகைய அத்துமீறலில் ஈடுபட்டு வருவது கண்டிக்கத்தக்கது.

Read Entire Article