‘மீனவர் பிரச்சினையை தீர்ப்பதில் மத்திய அரசுக்கு அக்கறை இல்லை’ - செல்வப்பெருந்தகை

3 months ago 13

சென்னை: “இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் இருக்கும் தமிழக மீனவர்களை விடுவிப்பதோடு, பறிமுதல் செய்யப்பட்டுள்ள படகுகளையும் திரும்ப ஒப்படைக்க வேண்டுமென மத்திய அரசை கேட்டுக் கொள்கிறேன்.” என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு. செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழகத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் ஞாயிறு அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுடன் இரண்டு மீன்பிடி படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தமிழக மீன்வளத்துறையிடம் 427 மீனவர்கள் மீன்பிடிப்பதற்கான அனுமதி அட்டையை பெற்று மீன்பிடித்துக் கொண்டிருந்த போது இந்த கைது சம்பவம் நடந்திருக்கிறது. கடந்த 15 நாட்களில் ஐம்பதிற்கும் மேற்பட்ட மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

Read Entire Article