மின்கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி புதுச்சேரியில் 18-ம் தேதி முழு அடைப்பு: இண்டியா கூட்டணி அறிவிப்பு

1 week ago 8

புதுச்சேரி: மின்கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி புதுச்சேரியில் 18ம் தேதி முழு அடைப்புப் போராட்டத்துக்கு இந்தியா கூட்டணி அழைப்பு விடுத்துள்ளது.

புதுவையில் கடந்த 5 ஆண்டுகளாக ஆண்டு தோறும் மின் கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது. இதேபோல இந்த ஆண்டும் கடந்த பிப்ரவரி மாதம் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது. இதன் பிறகு மின் கட்டண உயர்வு ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், மக்களவைத் தேர்தல் குறுக்கிட்டதால், அறிவிக்கப்பட்ட மின் கட்டண உயர்வை அரசு நிறுத்தி வைத்தது. மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் கட்டண உயர்வை பரிசீலிக்கும்படி அரசு சார்பில் கோரிக்கையும் வைக்கப்பட்டது.

Read Entire Article