மின் வாரியத்தில் 79 பேர் இடமாற்றத்தை எதிர்த்து தொழிற்சங்கம் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி

1 week ago 5

சென்னை: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் எனும் டான்ஜெட்கோ நிறுவனத்தை, தமிழ்நாடு மின் உற்பத்தி கழகம் என்றும் தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழகம் எனவும் இரண்டாக பிரிக்கப்பட்டது.

இதையடுத்து, இரு நிறுவனங்களுக்கும் அதிகாரிகள், ஊழியர்களை இடமாற்றம் செய்வது தொடர்பாக, கடந்த பிப்ரவரி 12ம் தேதி அரசு, டான் ஜெட்கோ, தொழிற்சங்கங்கள் என முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு ஒப்பந்தமும் கையெழுத்தானது. அதன் அடிப்படையில், 79 பேரை இடமாற்றம் செய்து கடந்த ஜூன் 29ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதை எதிர்த்து தமிழ்நாடு மின்சார வாரிய கணக்காயர் மற்றும் களத் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

Read Entire Article