மாஞ்சோலை எஸ்டேட் விவகாரம்: மனித உரிமைகள் ஆணைய இயக்குநர் குழு நேரில் விசாரணை

1 day ago 4

திருநெல்வேலி: மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களை வெளியேற்றும் விவகாரம் மற்றும் அங்கு நடைபெறும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரிக்க தேசிய மனித உரிமை ஆணையம் அமைத்துள்ள குழு இன்று (புதன்கிழமை) மாஞ்சோலை சென்று விசாரிக்க உள்ளது.

மாஞ்சோலை தேயிலை தோட்டங்களின் ஒப்பந்த காலம் 2028 உடன் முடிவடையுள்ளதால் அதற்கு முன்னதாகவே அங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கு விருப்ப ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அங்கு பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு மின்சாரம் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.

Read Entire Article