தர்மபுரி, பிப்.8: பொம்மிடி எஸ்ஐ விக்னேஷ் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணி சென்ற போது, பொம்மிடியில் ஒரு மளிகை கடையில் சிலர் அமர்ந்து மது குடித்துக்கொண்டு இருந்தனர். போலீசாரை பார்த்ததும், அவர்கள் நாலாப்புறமும் தப்பியோடி விட்டனர். போலீசார் விசாரணையில் அனுமதியின்றி பார் நடத்தியது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, பார் நடத்திய அதேபகுதியை சேர்ந்த பெருமாள் (61) என்பவரை கைது செய்தனர். மேலும் கடையில் விற்பனைக்காக வைத்திருந்த ₹8,000 மதிப்புள்ள மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
The post மளிகை கடையில் பார் நடத்தியவர் கைது appeared first on Dinakaran.