மருத்துவக் கல்வி இயக்குநருக்கு ரூ.5 லட்சம் அபராதம்: மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவு

2 days ago 2

மதுரை: மருத்துவக் கல்வி இயக்குநருக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்டம் பழங்காநத்தத்தைச் சேர்ந்த அருணகிரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் 2017-ல் தாக்கல் செய்த மனுவில், ‘என் மகள் 2017- 18 கல்வி ஆண்டில் நடைபெற்ற நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றார். இருப்பினும் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு முறைப்படி நடைபெறவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட என் மகளுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்’ எனக் கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்து நீதிபதி சரவணன் இன்று (செப்.17) பிறப்பித்த உத்தரவு: மனுதாரரின் மகள் (காட்டுநாயக்கன்) பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்தவர். பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் 1124 மதிப்பெண்களை பெற்ற அவர், நீட் தேர்வில் 136 மதிப்பெண்களை பெற்று கவுன்சலிங்கில் கலந்து கொண்டுள்ளார். அவர் 46 இடங்களுக்கான பட்டியலில் 43-வது நபராக கலந்து கொண்டு இருந்திருக்கிறார். அரசு மருத்துவக் கல்லூரிகளில் 3 இடங்கள் இருந்த நிலையில், மருத்துவ கல்வி இயக்குநர் அவற்றை ஓசி பிரிவை சேர்ந்த சுபிஷா, ஸ்ரீமதி, கவிதா ஆகியோருக்கு ஒதுக்கியுள்ளார்.

Read Entire Article