சென்னை: ரூ.40 கோடி மதிப்புள்ள மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை குறைந்த வாடகைக்கு விட ஒப்புதல் அளிக்கும் அரசாணையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் அறநிலையத் துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை பசுமை வழிச்சாலையில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான ரூ.40 கோடி மதிப்புள்ள 10 கிரவுண்ட் நிலத்தை இந்திய மாதர் சங்கம் என்ற அமைப்புக்கு கடந்த 2010-ம் ஆண்டு முதல் 29 ஆண்டுகளுக்கு ரூ.3 ஆயிரம் வாடகை என்ற அடிப்படையில் குத்தகைக்கு விட ஒப்புதல் அளித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இந்த அரசாணையை ரத்து செய்யக்கோரி மயிலாப்பூரைச் சேர்ந்த டி.ஆர். ரமேஷ் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.