மயங்கி விழுந்து காவலாளி சாவு

3 months ago 7

தர்மபுரி, பிப்.8: தர்மபுரி வெள்ளாம்பட்டி அடுத்துள்ள வேம்பமரத்து கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (70). இவர் அங்குள்ள வீட்டில் காவலாளியாக பணியாற்றி வந்தார். கடந்த 4ம் தேதி வேலை செய்யும் வீட்டின் முன் இரவு காவல் பணியில் இருந்த போது திடீரென மயங்கி விழுந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பன்னீர்செல்வம் உயிரிழந்தார். இதுகுறித்து தர்மபுரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.

The post மயங்கி விழுந்து காவலாளி சாவு appeared first on Dinakaran.

Read Entire Article