திருச்சி: “மத்தியில் கூட்டணி ஆட்சி நடப்பது போல் தமிழகத்திலும் நடப்பது தவறில்லை. மது ஒழிப்பு மாநாடு தேர்தல் அரசியல் என்று திசை திருப்ப முயற்சி நடக்கிறது.” என விசிக தலைவர் திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார்.
திருச்சி விமான நிலையத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ‘திசை திருப்புகிறார்கள்’ .. விசிக நடத்தும் மது ஒழிப்பு மாநாடு தேர்தல் அரசியலுடன் தொடர்புடையது அல்ல. சமூகப் பொறுப்பை உணர்ந்து முன்னெடுக்கப்படும் மாநாடு. இந்திய அளவில் பல்லாயிரக்கணக்கான பெண்கள் கைம்பெண்களாக துன்பத்தில் உழன்று வருகின்றனர். இந்தியாவில் மது உள்ளிட்ட போதை பொருட்களால் பாதிக்கப்பட்டுள்ளோர் எண்ணிக்கை கணக்கிலிட முடியாத அளவுக்கு உள்ளது.