‘மதுவை ஒழிக்கும் அதிகாரத்தில் இருப்பவர்களை அழைத்துச் சென்று மாநாடு’ - ஜி.கே.வாசன் சாடல்

1 day ago 2

நாகர்கோவில்: “மதுவை ஒழிக்கும் அதிகாரத்தில் இருப்பவர்களை அழைத்துச் சென்று மது ஒழிப்பு மாநாடு நடத்துவது வேடிக்கையாக இருக்கிறது” என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்

இது தொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் இன்று (புதன்கிழமை) நாகர்கோவிலில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: பொய் வாக்குறுதிகளை கூறி திமுக ஆட்சிக்கு வந்துள்ளது. இந்தியாவிலேயே வாக்குறுதிகளை நிறைவேற்றாத முதல் அரசாக திமுக அரசு உள்ளது. வாக்கு வங்கி அரசியலுக்காக திமுக தொடர்ந்து செயல்படுவதை மக்கள் ஏற்க மாட்டார்கள். மதுவை ஒழிக்கும் அதிகாரத்தில் இருப்பவர்களை அழைத்துச் சென்று மது ஒழிப்பு மாநாடு நடத்துவது என்பது வேடிக்கையாகவும், புதிராகவும் உள்ளது. இதற்கு தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள்.

Read Entire Article