“மதுவிலக்கை அமல்படுத்தியவர் கருணாநிதி; அரசு நிறுவனமாக்கியவர் ஜெயலலிதா” - அமைச்சர் சிவசங்கர்

6 days ago 4

அரியலூர்: “தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்தியவர் கருணாநிதி. மீண்டும் மதுக்கடைகளை திறந்தவர் எம்ஜிஆர். அதனை அரசு நிறுவனமாக்கியவர் ஜெயலலிதா'' என்று தெரிவித்துள்ள அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், “மது ஒழிப்பு மாநாட்டில் அதிமுக பங்கேற்பது குறித்து அவர்கள் தான் சிந்தித்து முடிவு எடுக்க வேண்டும்”' என தெரிவித்தார்.

திமுகவின் பவள விழாவையொட்டி, திமுகவினர் இல்லம் தோறும் கட்சி கொடி ஏற்றும் நிகழ்ச்சியின் தொடக்க நிகழ்ச்சி அரியலூர் ராஜாஜி நகரில் உள்ள போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் வீட்டின் முன்பு இன்று (செப்.13) நடைபெற்றது.

Read Entire Article