மதுரையில் கூட்டுறவு சங்க பணியாளர் நாள் கூட்டம்: மண்டல இணை பதிவாளர் தகவல்

1 week ago 4

 

மதுரை, செப். 11: 2024-2025ம் ஆண்டு கூட்டுறவு துறை மானிய கோரிக்கையின் போது கூட்டுறவுத்துறை அமைச்சரால் அறிவிக்கப்பட்டதன்படி, மதுரை மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து வகை சங்கங்களில் பணியாற்றி வரும் பணியாளர்கள் மற்றும் ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கான நாள் கூட்டம் 13.09.2024 அன்று காலை 10.30 மணியளவில் மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைமையத்தில் மதுரை மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் மற்றும் மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் இணை பதிவாளர்/ மேலாண்மை இயக்குநர் தலைமையில் நடைபெறவுள்ளது.

இதில் அனைத்து வகை சங்கங்களில் பணியாற்றுவோர் மற்றும் ஓய்வு பெற்றோர் தங்கள் பணி மற்றும் கோரிக்கை தொடர்பான மனுவினை பகிர்வதுடன், அவற்றுக்கு விதிகளுக்குட்பட்டு தீர்வு காணும் வகையில் பணியாளர் நாள் நிகழ்வு நடைபெறவுள்ளது. எனவே, இந்நிகழ்வில் கலந்து கொண்டு பணியாளர்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை அளிக்கலாம் இத்தகவலை மதுரை மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் சி.குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.

The post மதுரையில் கூட்டுறவு சங்க பணியாளர் நாள் கூட்டம்: மண்டல இணை பதிவாளர் தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article