மதுரை: 2 ஆசிரியைகளை பலிகொண்ட தீ விபத்து ஏற்பட்டுள்ள நிலையில் மதுரையில் அனுமதியின்றி செயல்படும் மகளிர் விடுதிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழகத்திலுள்ள முக்கிய நகரங்களில் ஒன்று மதுரை. வேலை வாய்ப்பு, கல்வி, வர்த்தகம் போன்றவற்றுக்காக வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் மதுரைக்கு வருகின்றனர். குறிப்பாக, பணிக்குச் செல்லும் பெண்களும் மாணவிகளும் விரும்பி மதுரைக்கு வருகின்றனர். குடும்பத்தினருடன் வந்து தங்கமுடியாத பெண்களும் மாணவிகளும் தனி வீடு எடுத்துத் தங்கமுடியாததால் தனியார் மகளிர் விடுதிகள், இல்லங்களில் கட்டணம் செலுத்தி தங்குகின்றனர்.