மதுரை: மதுரையில் தீ விபத்தில் சிக்கிய மகளிர் விடுதிக்கு தொடர்புடைய மருத்துவமனையில் போலி மருத்துவர் கைது செய்யப்பட்டார்.
மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகிலுள்ள கட்ராப்பாளையம் தெரு பகுதியில் 'விசாகா பெண்கள் தங்கும் விடுதி' என்ற பெயரில் தனியார் விடுதி ஒன்று கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கிவந்தது. இங்கு மதுரை, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவியர், தனியார் மற்றும் அரசுத்துறையில் பணிபுரியும் பெண்கள் என 45-க்கும் மேற்பட்டோர் தங்கி இருந்தனர்.