மதுரை | சுகாதார ஆய்வாளர் மீது தூய்மைப் பணியாளர் புகார்: காவல்துறைக்கு கோர்ட் உத்தரவு

6 days ago 4

மதுரை: மதுரை மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் மீது நடவடிக்கை கோரி தூய்மைப் பணியாளர் அளித்துள்ள புகாரை விசாரித்து நடவடிக்கை எடுக்க போலீஸ் உதவி ஆணையருக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த பொன்னுத்தாய், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், “நான் அருந்ததியர் வகுப்பைச் சேர்ந்தவர். மதுரை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளராக உள்ளேன். என்னுடன் அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்த பல்வேறு தூய்மைப் பணியாளர்கள் உள்ளனர். சுகாதார ஆய்வாளராக ரமேஷ் என்பவரின் கீழ் நாங்கள் பணியாற்றுகிறோம். அவர் உயர் சாதியைச் சேர்ந்தவர். இதனால் என்னையும், என்னை போன்ற தூய்மைப் பணியாளர்களையும் இழிவுபடுத்தும் வகையில் சாதியைச் சொல்லி திட்டுவதும், பெண்கள் மீதான வன்கொடுமை நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகிறார்.

Read Entire Article